ஜப்பானில் எரிமலை சீற்றம் : பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு.

ஜப்பானில் எரிமலை சீற்றம் : பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு.

6

 

ஜப்பானின் ஆன்டாகே எரிமலை வெடித்ததில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் 31 உடல்களைக் கண்டெடுத்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் ஐந்து பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. சீற்றத்தைத் தொடர்ந்து, எரிமலையிலிருந்து வெளியேறிய சிறிய பாறைகள், சாம்பல் ஆகியவை ஏறத்தாழ ஒரு மீட்டர் அளவுக்கு மலைச்சரிவில் குவிந்துள்ளன. அந்தக் குவியலின் கீழ் மேலும் எத்தனை பேரின் உடல்கள் புதைந்துள்ளன என்பது குறித்த தெளிவான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.