நேற்று முன்தினம் ஈராக்கின் வடக்கே தியாலா மாகாணத்தில் உள்ள காரா டபா நகரில் தீவிரவாதிகள் ஒரே இடத்தை குறிவைத்து 3 முறை மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர்.இந்த தாக்குதல்களில் சம்பவ இடத்திலேயே 25 பேர் பலியானார்கள். 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 33 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது.
