சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி- சென்னை – லாகூர் ஆட்டம் மழையால் ரத்து.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி- சென்னை - லாகூர் ஆட்டம் மழையால் ரத்து.

7

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸ் லாகூர் லயன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியது. தொடர்ந்து மழை கொட்டியதால் டாஸ் கூட போடப்படாமல் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டன.