MH17: 9 சடலங்களை ஏற்றி வந்த MH19 விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது

MH17: 9 சடலங்களை ஏற்றி வந்த MH19 விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது

files

MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்கள் 9 பேரை ஏற்றி வந்த MH19 விமானம் இன்று காலை 6.37 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

5 சடலங்கள் 4 அஸ்தி பாத்திரங்களை ஏற்றி வந்த MH19 விமானம் KLIA  விமான நிலைய பூங்கா ராயா மையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு தாயகம் கொண்டுவரப்பட்ட 9 சடலங்களுக்கும்  இறுதி மரியாதை செலுத்தப்படும்.

இன்று தாயகம் கொண்டுவரப்பட்ட 9 சடலங்களில் இருவரின் சடலங்கள் MH17 விமானத்தின் தலைமை விமானி வான் அம்ராம் வான் ஹுசேன், மற்றும் எயுகின் சூ சின் லியோங் ஆகியோருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று கொண்டுவரப்பட்ட சடலங்களில் 7 மலேசியர்களுடையது. அவர்களில் இருவர் இஸ்லாமியர்கள், ஏனைய ஐவர் இஸ்லாம் அல்லாதவர் என தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் துன் உசேன் தெரிவித்தார்.