வியந்து பாராட்டினார் விஞ்ஞானி

வியந்து பாராட்டினார் விஞ்ஞானி

nadhigal

நவம்பர் 28, திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லாத விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சமீபத்தில் ‘நதிகள் நனைவதில்லை’ படத்தைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார். இதனால் மகிழ்ச்சியில் நனைந்துகொண்டிருக்கிறார் படத்தின் இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்.

சென்னை இசைக்கல்லூரி யில் இருக்கும் தாகூர் ஃபிலிம் சென்டர் பிரிவியூ தியேட்டரில் மனைவியுடன் படம் பார்த்திருக்கிறார் விஞ்ஞானி. ‘‘படத்தின் கதை, வசனங்கள், பாடல்கள், படமாக்கிய விதம் எல்லாமே என்னைக் கவர்ந்தன.

கன்னியாகுமரியின் ஒட்டுமொத்த அழகையும் நேரில் பார்ப்பதுபோல அழகாகப் படமாக்கியுள்ளனர். சண்டைக் காட்சிகளைக்கூட ரசிக்கும் விதத்தில் எடுத்துள்ளார் இயக்குனர். குடும்பத்தோடு பார்க்கக்கூடிய உயர்ந்த கருத்துகள் படத்தில் இருக்கின்றன. படம் முடிந்தபிறகும் அநேக காட்சிகள் மனதைவிட்டு அகல மறுக்கின்றன’’ என்று விஞ்ஞானி பாராட்டியதில் ஒட்டுமொத்த படக்குழுவும் உற்சாகமாக இருக்கிறது.