நிபோங் தெபால்: பேருந்து லாரியுடன் மோதியதில் 9 பேர் படுகாயம்

நிபோங் தெபால்: பேருந்து லாரியுடன் மோதியதில் 9 பேர் படுகாயம்

bus-crash11

நவம்பர் 29, நிபோங் தெபால், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 153-வது கிலோ மீட்டரில் உள்ள சுங்கை பாக்காப் அருகே, பயணிகளை ஏற்றி வந்த பேருந்து லாரியுடன் மோதியதில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு 11.40 மணியளவில், வடக்கிலிருந்து வந்துக்கொண்டிருந்த விரைவு பேருந்து, எரிவாயு சிலிண்டர்களை எற்றி வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 6 பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் அடங்குவர்.