வான் அசிசாவுக்கு ஒத்துழைப்போம் பாஸ்: நெருக்கடியில் சிலாங்கூர் மந்திரி

வான் அசிசாவுக்கு ஒத்துழைப்போம் பாஸ்: நெருக்கடியில் சிலாங்கூர் மந்திரி

images42

டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா மீது அதிருப்தி காரணமாகத் தான் பாஸ் கட்சி சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவிக்கு அஸ்மின் அலியின் பெயரைப் பரிந்துரைத்தது.
‘சிலாங்கூர் அரண்மனையிலிருந்து மந்திரி புசார் பதவிக்குப் பொருத்தமானவர் அல்ல என்ற தகவல் வந்ததால் தான் அஸ்மின் அலியை நாங்கள் தேர்ந்தெடுத்தும்.
ஆனால், பக்காத்தான் தலைவர்களும், சிலாங்கூர் அரண்மனையும் ஒப்புக்கொண்டால் நாங்கள் டத்தோ ஶ்ரீ வான் அசிசாவுடன் ஒத்துழைப்போம் என பாஸ் கட்சியின் துணை ஆணைய சாலேஹின் முக்யி தெரிவித்தார்.
சிலாங்கூர் சுல்தான் வெளிநாட்டில் இருப்பதால் மாநில அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் டான் ஶ்ரீ காலிட்டிடம் உள்ளது. இந்த நேரத்தில் காலிட் பதவி விலகுவது மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்திவிடும்’ என்றார் அவர்.
எனவே சுல்தானின் வருகைக்காக காத்திருப்போம் என சாலெஹின் தெரிவித்தார்.