வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் குளறுபடி ஏற்படுமா? டாக்டர் சுப்ரா பதில்

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

நவம்பர் 5, பரபரப்பான சூழ்நிலையில் ம.இ.கா மறுதேர்தல் நடைபெறவிருக்கும் இந்த நிலையில், இம்முறை வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் குளறுபடி ஏற்படுமா? அதைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என ம.இ.கா-வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திடம் கேட்டபோது, கடந்தமுறை வாக்கு எண்ணிக்கை குளறுபடியால் ம.இ.கா-வில் பெரும் சுனாமி ஏற்பட்டது. இம்முறை அப்படிப்பட்ட சுனாமி அலைகளுக்குத் தடுப்புப் போடப்பட்டுள்ளது. எல்லா இடங்களும் கண்காணிக்கப்படும். பண வேட்டையும் கண்காணிக்கப்படும் என்றார்.