கந்த சஷ்டி விழா நவ.12-ல் தொடக்கம்

Online Tamil News Malaysia

Online Tamil News Malaysia

நவம்பர் 5, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நவ.12-ம் தேதி தொடங்கவுள்ளது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடை பெறும். நவ.13-ம் தேதியில் இருந்து 16-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும்.

நவ.17-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த் தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாரா தனை, மற்ற கால பூஜைகளும் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்குமேல் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. மறுநாள் 18-ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.