ரவுண்டு கட்டுவாரா ஸ்ரேயா

ரவுண்டு கட்டுவாரா ஸ்ரேயா

Sreya8

டிசம்பர் 1, மழை படத்தில் அறிமுகமாகி ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் கைகோர்த்து வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த ஸ்ரேயா திடீரென்று கடலில் போட்ட குண்டூசியைபோல் தேடுகின்ற நிலைக்கு ஆளானார். இதற்கிடையில் சந்திரா, பவித்ரா என்று 2 படங்கள் வந்தும் கைகொடுக்கவில்லை. இந்தியில் நடிக்கிறேன் என்று மும்பைக்கு போனவர் அப்படியே மாயமாகிவிட்டார். பிறகு நாகார்ஜுனாவின் ‘மனம்‘ தெலுங்கு படத்தில் நடித் தார்.ரசிகர்கள் முன் தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதற்கான சான்ஸுக்காக காத்திருந்தார். ஆந்திராவை தாக்கிய ஹூட்ஹூட் புயல் நிவாரண நிதிக்காக இன்று ஐதராபாத்தில் நட்சத்திர நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்துகொண்டு ஆடுவதாக தானாக முன்வந்து பெயரை பதிவு செய்திருக்கும் ஸ்ரேயா கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஹிட்டான பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்த சாக்கில் இண்டஸ்ரிகாரர்களின் மனதை கவர்ந்து மீண்டும் ஒரு ரவுண்டு வர எண்ணி இருக்கிறாராம்.