மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை ம.இ.கா இளைஞர் பிரிவு உதவுகிறது

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை ம.இ.கா இளைஞர் பிரிவு உதவுகிறது

malaysia-floods

மலேசியாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ம.இ.கா இளைஞர் பிரிவு வரும்  ஞாயிற்றுக்கிழமை (11/01/2015) காலை 8 மணியளவில் தெமெர்லோ சென்று கோலாகிராயில் சுத்தம் செய்யும் பணியையும், பாதிக்கப்பட்டோருக்கு தேவையான பொருட்களையும் வழங்குகிறது. பின்னர் கோலா லிபிஸில் தங்கி அங்கிருந்து கிளாந்தான் சென்று பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சுத்தம் செய்கிறது. மேலும் இப்பணிக்காக 3 பேருந்துகள், 10 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 140 கனரக வாகனங்கள் பயன்படுத்தபடுகிறது. இதில் மகளிரணியும் கூட்டாக கலந்துக்கொள்கின்றது. இதனை மஇகா இளைஞர் பிரிவின் செயலாளர் திரு.அர்விந்த் கிருஷ்ணன் நேற்று (08/01/2015) மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார். மேலும் எங்களுக்கு உதவ இளைஞர் தொண்டர்கள் தொண்டாற்றுவதற்கு தேவை.  இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொடர்புக்கு- புனிதன் பரமசிவன் 0172724033.