பிலிப்பின்ஸ் ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் மலேசிய தீவிரவாதி பலி

பிலிப்பின்ஸ் ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் மலேசிய தீவிரவாதி பலி

death (1)

ஜனவரி 27, பிலிப்பின்ஸ் ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் உலக நாடுகளால் தேடப்பட்டு வந்த மலேசிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
மூவார் ஜொகூரைச் சேர்ந்த 48 வயது நிறம்பிய சூல்கிப்லி அப்டுல் ஹீர் பல ஆண்டுகளாக அனைத்துலக போலீஸ் படையால் தேடப்பட்டு வந்தவர் ஆவார். வெடிகுண்டுகள் வைப்பதில் பிரபலமான இவரும் இவரது தீவிரவாதக் கும்பலும் பல குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
அந்தவகையில் இன்று அதிகாலை பிலிப்பின்ஸ் ராணுவத்திற்கும் இவரது தீவிரவாதக் கும்பலுக்கும் ஏற்பட்ட மோதலில் இவரும் இவரது கும்பலைச் சேர்ந்த பலரும் உயிர் இழந்தனர். மேலும் இம்மோதலில் ஏறக்குறைய 49 பிலிப்பின்ஸ் கமாண்டோ வீரர்களும் பலியாகியுள்ளனர்.

இருப்பினும் இச்சம்பவம் குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு ராணுவத்தால் மலேசிய போலீஸ் படைக்கு எவ்விதத் தகவலும் இதுவரைத் தெரிவிக்கப்பட்டவிலை என மலேசிய போலீஸ் தலைவர் டான் ஶ்ரீ காலிட் அபு பாகார் தெரிவித்துள்ளார்.