பாகிஸ்தானில் வான்வழி தாக்குதலில் 31 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானில் வான்வழி தாக்குதலில் 31 தீவிரவாதிகள் பலி

terrorist1

ஜனவரி 5, பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளிக்கூடத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 133 குழந்தைகள் உள்பட 150 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஆப்கான் எல்லையில் அமைந்துள்ள கைபர் பழங்குடி பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல்களை நடத்தியது. திர்ராக் மற்றும் கைபர் பகுதியில் நடந்த இந்த அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகளின் 4 பதுங்கும் இடங்களும், தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சி அளிக்கும் முகாமும் அழிக்கப்பட்டது. மேலும், தற்கொலைப்படை தீவிரவாதிகள் உள்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.