புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் பணியை ம.இ.கா துவங்கியுள்ளது

புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் பணியை ம.இ.கா துவங்கியுள்ளது

logo

மார்ச் 24, வருகிற பொதுத் தேர்தல் முன்னிட்டு புதிய வாக்காளர்களை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதை ம.இ.கா துவங்கியுள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 50,000 புதிய வாக்காளர்களை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதை ம.இ.கா இலக்காக கொண்டுள்ளது.

இந்தியர்களை கண்டறிந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என்று கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் எல்.சிவசுப்ரமணியம் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் புதிய வாக்காளர்கள் பதிவு செய்யும் பிரச்சாரத்தை தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேல் அடுத்த மாதம் தொடக்கி வைப்பார் என்று எல்.சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.