38 நாட்டு ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி

38 நாட்டு ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி

Military-Exercise

மார்ச் 23, இந்தியா எந்த நாடு மீதும் ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை. அதே சமயத்தில் இந்தியா தன் வலிமையை அதிகரித்து கொள்ள தயங்காது.

விசாகப்பட்டினத்தில் விரைவில் கடற்படை கப்பல்களின் போர் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த கூட்டுப் பயிற்சியில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

இந்தியாவின் 40 கப்பல்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும். சீனாவை இந்த கூட்டுப் பயிற்சிக்கு அழைப்பது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்களை 38 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தவிர அந்த 38 நாடுகளும் ராணுவ பயிற்சிக்கு இந்தியாவையே நம்பியுள்ளன.

தற்போது அந்த 38 நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி கொடுத்து வருகிறது. பாதுகாப்பு கருதி அந்த 38 நாடுகள் எவை எவை என்ற விபரத்தை வெளியிட இயலாது.