தலைமைத்துவ ஆற்றலை மாணவர்களிடையே அதிகரிக்க செய்ய வேண்டும்

தலைமைத்துவ ஆற்றலை மாணவர்களிடையே அதிகரிக்க செய்ய வேண்டும்

STAR

நவம்பர் 12, சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டில் நான்காம், ஜந்தாம், ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான சீருடை இயக்கப்பயிற்சி முகாம் இங்கு புரோகா கண்ட்ரி ரிஷோட் பயிற்சி மையத்தில் மூன்று நாள் பயிற்சியாக நடைபெற்றது.

இப்பயிற்சியை பள்ளித் தலைமையாசிரியர் ரோஸ்வான் பின் அப்துல்லா நிறைவு செய்து வைத்தார். இந்த பயிற்சி மாணவர்களிடையே மனவலிமையை ஏற்படுத்தவும், துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்யும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார். நம் மாணவர்கள் அனைவரும் திறமைசாலிகள் அறிவாற்றல்மிக்கவர்கள், சரியான வழிகாட்டலை அவர்களுக்கு அடையாளம் காட்டினால் நிச்சயமாக அவர்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்ல குடிமகனாக உருவாகுவார்கள்.