நெகிரி மாநில தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு பொதுமக்களுக்கு அழைப்பு

நெகிரி மாநில தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு பொதுமக்களுக்கு அழைப்பு

n_12deepavali

நவம்பர் 12, நெகிரி மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு 12.11.2014 புதன்கிழமை பகல் 3.45 மணியளாவில் சிரம்பான் நகராண்மைக்கழக வளாகத்தில் நடைபெறவிருப்பதாக நெகிரி மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் மாணிக்கம் லட்சுமணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாளராக நெகிரி மாநில பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் மற்றும் அவரின் துணைவியாரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். பல்வேறு இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளுடன், பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறவிருக்கின்றன. எனவே, பொதுமக்கள் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு மாநில அரசு சார்பாக மணிக்கம் கேட்டுகொண்டார்.