டான் ஶ்ரீ காலிட் சிலாங்கூர் மந்திரி புசாராக நீடிப்பார்

டான் ஶ்ரீ காலிட் சிலாங்கூர் மந்திரி புசாராக நீடிப்பார்

khalidibrahim

இன்று காலை 9 மணிக்கு சிலாங்கூர் மாநில சுல்தானுடன் தனது பதவி குறித்து விவாதித்த பின்னர் தாம் சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக நிலைப்பதாகவும், தமது கடமைகளை வழக்கம் போல தொடரப் போவதாகவும் டான் ஶ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தாம் மந்திரி புசாராக நீடிப்பதற்கு சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திடம் ஆதரவு இருப்பதாக அவர் கூறினார்.
தம் மீதான அனைத்துக் குற்றஞ்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.

இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.