டாக்டர் s.சுப்பிரமணியம் சந்திப்புக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்து 90க்கும் மேற்பட்ட தொகுதி தலைவர்கள் கலந்துகொண்டனர்

டாக்டர் s.சுப்பிரமணியம் சந்திப்புக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்து 90க்கும் மேற்பட்ட தொகுதி தலைவர்கள் கலந்துகொண்டனர்

YBM_MOHR_DrSubra_modified

ஜனவரி 27, புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, 2009-2013-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக கட்சியை நிர்வகிக்க வேண்டும் என்று 90 மஇகா பிரிவின் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். என்று மஇகா தேசிய துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்த கூட்டம் நான்கு மணி நேரம் நடைபெற்றது. இதில் மஇகா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் டத்தோ எம்.சரவணன் மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மலாக்கா 2013ஆம் ஆண்டு நடந்த உள்கட்சி தேர்தலில் போட்டியில்லாத வெற்றி பெற்ற தலைவர், துணைத்தலைவர், மகளிரணி தலைவி மற்றும் இளைஞர் அணி தலைவர் ஆகியோர் பதவியில் நீடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.