டத்தோ புவாட் அவர்களின் மரணம் நாட்டிற்கு பேரிழப்பு

டத்தோ புவாட் அவர்களின்  மரணம் நாட்டிற்கு பேரிழப்பு

unnamed (1)

ஜாசா எனப்படும் (JASA) Jabatan Hal Ehwal Khas துறையின் இயக்குனர் டத்தோ புவாட் பின் தான் ஸ்ரீ ஹசான் அவர்கள் இறைவனடி ஏந்தினார். ஜாசா துறையில் பல இனத்தவர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்று இத்துறையில் பல இந்தியர்கள் பணியாற்றுவத்ற்கு காரணமாக இருந்தவர் இவர் என்று கூறினால் அது மிகையாகாது. பல இளைஞர்களுக்கு இத்துறையில் வாய்ப்பு வழங்கி சேவையாற்ற வைத்த பெருமை இவரையே சாறும்.

பல இனவாதிகள் நமது நாட்டின் சுபிட்சத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் போது அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று கூறி, அந்த ஒற்றுமைக்காக போராடியவர் டத்தோ புவாட் துறையின் இயக்குனராக மட்டுமல்லாது நல்ல ஒரு தலைவராகவும் தொலைநோக்கு சிந்தனையாளரும் கூட டத்தோ அவர்கள் விளங்கினார். அவர்களுடைய சிந்தனையாற்றலால் பல மாறுதல்கள் நமது நாட்டில் நடைப்பெற்றுள்ளது. நமது அரசாங்கம் பல திட்டங்களை செய்ததற்கும் கைவிட்டதற்கும் டத்தோ புவாட் அவர்களின் கருத்தும் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. என்னை ஜாசாவில் பணியாற்ற வைத்து இன்று நான் ஒரு தலைவராக தூர நோக்கு சிந்தனையில் செயலாற்ற வைத்ததில் டத்தோ புவாட் அவர்களிக்கும் ஒரு பங்கு உள்ளது என்றே கூறியாக வேண்டும். மிக சிறந்த ஆசான், மனிதன் டத்தோ புவாட் அவர்கள் அவர்களது மரணம் நாட்டிற்கும் ஜாசா துறைக்கும் ஒரு பேரிழப்பு என்றே கூறியாக வேண்டும்.