பினாங்கு மாநிலத்தில் தொடர் கொலை

பினாங்கு மாநிலத்தில் தொடர் கொலை

death (1)

டிசம்பர் 9, பினாங்கு மாநிலத்தில் மியன்மார் நாட்டவர்கள் தொடர் கொலை செய்யப்பட்ட வீடு கண்டு பிடிக்கப்பட்டு ஒரு வாரம் நிறைவடைவதற்குள் புக்கிட் மெர்தாஜாமில் மற்றொரு அந்நிய நாட்டவர் கழுத்தறுக்கப்பட்டு கிடந்தார்.
கழுத்து, காதுகள், கை, மற்றும் வயிற்றுப்பகுதியில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான அந்த அந்நிய நாட்டவர் இங்கு ரெலாவ் அருகே மெட்ரோபாலிட்டன் பூங்காவில் இறந்து கிடந்தார்.
பள்ளி ஆசிரியர் ஒருவர் அந்த தனது கார் நிறுத்துமிடத்திற்கு நடந்து சென்ற போது காலை 10 மணியளவில் அச்சடலத்தைக் கண்ட பிறகு போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் தம்மைத் தாக்கியவர்களுடன் தற்காப்புக்காக போராடியுள்ளது தெரியவந்துள்ளது.

இறந்தவர் ஒரு அந்நிய நாட்டவர் என்பது தெரிந்தாலும் அவர் எந்த நாட்டவர் என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.