டத்தோஸ்ரீ சுப்ரா டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் நியமனத்திற்கு பிரதமருக்கு நன்றி கூறினார்.

டத்தோஸ்ரீ சுப்ரா டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் நியமனத்திற்கு பிரதமருக்கு நன்றி கூறினார்.

23june_2

மஇகாவின் கோரிக்கையை ஏற்று, கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை நீட்டித்திருப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு மஇகா சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என மத்திய சுகாரத்துறை அமைச்சரும் ம.இ.கா தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மஇகா மீது நம்பிக்கை வைத்தும், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் விக்னேஸ்வரன் மீது நம்பிக்கை வைத்தும் பிரதமர் மேற்கொண்டிருக்கும் இந்த நியமனத்திற்கு இந்திய சமுதாயத்தின் சார்பாகவும், கட்சியின் சார்பாகவும் எங்களின் நன்றியை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த கௌரவமான பொறுப்பின் பெருமையை உணர்ந்து விக்னேஸ்வரனும் சிறந்த முறையில் தனது ஆற்றலையும், உழைப்பையும் தனது கடமைகளை நிறைவேற்ற வழங்குவார் எனப் பெரிதும் நம்புகிறேன்.

அதுமட்டுமின்றி நாட்டின் ஆட்சி அமைப்பு முறை வரிசையில் மாமன்னருக்கும் துணை மாமன்னருக்கும் அடுத்த நிலையில் இருக்கும் மிகப் பெரும் கௌரவத்தைக் கொண்டது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியாகும். எனவே, இதனுடன் மிகப் பெரும் பொறுப்பும், கடமையும் இந்தப் பதவியைச் சார்ந்திருக்கின்றது.

அதற்கேற்ப விக்னேஸ்வரனும் தனது கடமைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்புடன் ஆற்றி, தனது பரந்த அரசியல் அனுபவம் மிக்க சேவைகளின் மூலம், மஇகாவுக்கும், இந்திய சமுதாயத்திற்கும் பெருமையைத் தேடித் தருவார் என நம்புகிறேன்.

23june_1   23june_10