டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் மேலவை தலைவரானார்.

டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் மேலவை தலைவரானார்.

23june_3

டத்தோ ஸ்ரீ விக்னேஸ்வரன் இன்று 23/06/2017 காலை மேலவையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மேலவை தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். 52 வயதான ம.இ.கா துணைத் தலைவரான டத்தோ ஸ்ரீ விக்னேஸ்வரன்  முன்னதாக மேலவையின் செனட்டராக பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவி ஏற்றுக் கொண்ட டத்தோ ஸ்ரீ விக்னேஸ்வரன் தன்னை செனட்டாக்கியதற்கும் மேலவை தலைவராக்கியதற்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் தனது கடமையை செவ்வனே செய்வேன் எனவும் தெரிவித்தார்.

மஇகாவின் கோரிக்கையை ஏற்று, கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை நீட்டித்திருப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு மஇகா சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என ம.இ.கா தேசிய தலைவரும் மத்திய சுகாரத்துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

23june_12 23june_11 23june_9 23june_7 23june_4 23june_6 23june_1