செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்குனராகிறார்!

செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்குனராகிறார்!

Selvaraghavan-Gitanjali

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தை இயக்கி அறிமுகமானவர் செல்வராகவன். அதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம என்ன, இரண்டாம் உலகம் உள்பட பல படங்களை இயக்கியவர், அடுத்த படம் குறித்த தகவலை இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில், அவரது மனைவி கீதாஞ்சலி மாலை நேரத்து மயக்கம் என்றொரு படம் மூலம் இயக்குனராக உருவெடுக்கிறாராம்.

இதே தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு படம் இயக்குவதாக முடிவு செய்திருந்தார். அதில் கார்த்தி-சந்தியா ஜோடி சேர இருந்தனர். ஆனால் பின்னர் அதை கிடப்பில் போட்டு விட்டார் செல்வராகவன். அந்த படத்தைதான் இப்போது கீதாஞ்சலி தூசு தட்டுகிறாராம். மேலும் இந்த படத்திற்கு கதை திரைக்கதையை செல்வராகவன்தான் எழுதுகிறாராம்.

மற்றபடி, படத்தில் யார் ஹீரோ- ஹீரோயினாக நடிக்கிறார்கள் உள்பட டெக்னீசியன்கள் பற்றிய ஆலோசனைகள் நடைபெற்று வருகிறதாம். ஆக, கோடம்பாக்கத்தில் செளந்தர்யா ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ், துரோகி பட சுதா என பல பெண் இயக்குனர்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது கீதாஞ்சலியும் அந்த பட்டியில் இணைந்துள்ளார்.