சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்த பட்டாசு ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி.

சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்த பட்டாசு ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி.

6

 

விருதுநகர் அருகே உள்ள காரிசேரியில் சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடி விபத்து நேர்ந்தது.இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியானார்கள். இந்த விபத்தில் திருத்தங்கல்லைச் சேர்ந்த பிரபாகரன் (24) தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.