1,500 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்

1,500 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்

5

சாத்தூரில் நடைபெற்ற விழாக்களில் எட்டு பள்ளிகளைச் சார்ந்த 1,464 மாணவ மாணவிகளுக்கு ரூ.50.21 லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி . உதயகுமார் வழங்கினார்.சாத்தூர் எட்வர்டு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 280 பேர், எத்தல்ஹார்வி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 313 பேர், ஏ.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 170 பேர், புனித அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 121 பேர், மேலக்காந்திநகர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 51 பேர், கம்ம மகாசனம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 193 பேர்,ஏழாயிரம்பண்ணை நாடார் மகமை மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் 285 பேர், சங்கரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 51 பேர் என மொத்தம் 1,464 பேருக்கு ரூ.50.21 லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.விழாக்களில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் வசந்தாஅழகர்சாமி, சாத்தூர் நகர்மன்றத் தலைவர் டெய்சிராணி, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் வேலாயுதம், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்- மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.