தூத்துக்குடி, கோவை மாநகாராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வினர் முன்னிலை

தூத்துக்குடி, கோவை மாநகாராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வினர் முன்னிலை

7

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, ராமநாதபுரம், விருத்தாசலம், அரக்கோணம், கடலூர் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி உள்பட 530 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மேயர் பதவி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கிரேஸி முன்னிலை பெற்றுள்ளார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அந்தோணி கிரேஸி 11, 957 வாக்குகள் பெற்றுள்ளார். பாரதீய ஜனதா வேட்பாளர் ஜெயலட்சுமி 3126 வாக்குகள் பெற்றுள்ளார்.

கோவை மேயர் பதவி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி முன்னிலை பெற்றுள்ளார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி 20 534 வாக்குகள் பெற்றுள்ளார். பாரதீய ஜனதா வேட்பாளர் நந்தகுமார் 7751 வாக்குகள் பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பத்மநாபன் 1619 வாக்குகள் பெற்றுள்ளார்.