சிலாங்கூர் மாநிலத்தில் 10 புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்பு

சிலாங்கூர் மாநிலத்தில் 10 புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்பு

Azim3

சிலாங்கூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் திரு. அஸ்மின் அலி இன்று 25/09/2014 மதியம் சுமார் 2.40 மணிக்கு சுலதான் ஷர்புதின் இட்ரிஸ் ஷா வை அரண்மனையில் சந்தித்து சிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற குழுவில் இடம்பெற 10 உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைக்கும் கடிதத்தை அதிகாரபூர்வமாக வழங்கினார்.

இதை தொடர்ந்து மாலை செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஆட்சி மன்ற உறுப்பினர்களாக பரிந்துரைத்த 10 உறுப்பினர்களுக்கும் சுல்தான் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். தான் பரிந்துரைத்த அனைத்து ஆட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் ஒப்புதல் அளித்தமைக்கு சுல்தானுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்பார்கள் எனவும் திரு. அஸ்மின் தெரிவித்தார். இதற்கு முன்னர் இருந்த முறைப்படியே 10 ஆட்சி மன்ற உறுப்பினர்களில் பாஸ் உறுப்பினர்கள் நால்வர், பி.கே.ஆர் மற்றும் டி.ஏ.பி சேர்ந்த உறுப்பினர்கள் தலா மூவர் இடம்பெற்றிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.