சமுதாயத்திற்கு புதிய இலக்கை அமைப்போம் ! சிவசுப்பிரமணியம் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சமுதாயத்திற்கு புதிய இலக்கை அமைப்போம் ! சிவசுப்பிரமணியம் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

sivasubramaniam-mic

மலேசிய இந்தியர்களின் அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக தேவைகளைப் பாதுகாத்து தகவல் அறிந்த சமுதாயமாக நாம் புதிய இலக்கை அமைப்போம் என்று ம.இ.கா தேசிய தகவல் பிரிவுத் தலைவர் திரு. எல்.சிவசுப்பிரமணியம் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நன்நாட்டிற்கு பல்வேறு சோதனைகள் நிறைந்த நாண்டாக இருந்தது. ஆகவே இன்று பிறக்கும் இப்புத்தாண்டு நமக்கு பல புதிய சவால்களுடன், நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும், பரிணாமங்களையும் நோக்கி சிந்தனைக்குரிய ஆண்டாக விளங்கிட எல்லா வல்ல இறைவனின் அருள் நமக்கு கிட்ட வேண்டும்.

‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லார்க்கு எவ்வுலகும் இல்லை’ என்பது போல ஒவ்வொரு ஆண்டும் நான் உழைப்பால் முன்னேற வேண்டும் என்ற லட்சிய பாதையில் சென்று பல்வேறு சோதனைகளை சாதனைகளாக மாற்றிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் உள்ள மற்ற சமூகத்தினரின் வளர்ச்சியும், சமூக மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு தன்முனைப்பான சமுதாயமாக உருவெடுக்க வேண்டும்.

நமக்கு சுயமறுசிந்தனைக் கொண்ட ஆண்டாக இப்புத்தாண்டு அமைய வேண்டும் என்று திரு. சிவசுப்பிரமணியம் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.