வெள்ளத்தால்: முக்கிய பத்திரங்களை இழந்த மக்கள் இலவசமாக அதனை மீண்டும் விண்ணப்பிக்கலாம்

வெள்ளத்தால்: முக்கிய பத்திரங்களை இழந்த மக்கள் இலவசமாக அதனை மீண்டும் விண்ணப்பிக்கலாம்

Rain01

ஜனவரி 1, வெள்ளத்தில் தன் அடையாள அட்டை,பிறப்பு பத்திரம் போன்ற முக்கிய பத்திரங்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் இலவசமாக அதனை மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
நாட்டில் பல மாநிலங்களில் ஏற்பட்டு வரும் மோசமான வெள்ளத்தால் பல்லாயிரம் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து வருகின்றனர். இதில் குறிப்பாக அவர்களின் முக்கிய பத்திரங்கள் வெள்ளத்திற்கு இரையாகியுள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டே தேசிய பதிவு இலாகா பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக பத்திரங்களை மீண்டும் செய்துத் தர முன்வந்துள்ளது. தங்கள் இடத்தில் வெள்ளம் வற்றியப்பின் அருகில் உள்ள பதிவு இலாகா அலுவலகங்களில் இவர்கள் புதிய பத்திரங்களை விண்ணப்பிக்கலாம்
இது குறித்து மேல் விபரங்கள் பெற பொதுமக்கள் 0388880 7077/7067/7069/8206 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்ளலாம்.