இளம்பெண் தற்கொலை.

இளம்பெண் தற்கொலை.

2

தொட்டியம் சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன் மகள் அஞ்சலி (22). இதே ஊரைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் பிரகாஷ் (28). இவர்கள் இருவரும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அஞ்சலி, விஷத்தை குடித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை, தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக  நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஞ்சலி இறந்தார். இதுகுறித்து தொட்டியம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ரசியா சுரேஷ் ஆகியோர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.