ஆற்றோர மக்கள் வெளியேற மறுப்பு: ஜி.பழனிவேல்

ஆற்றோர மக்கள் வெளியேற மறுப்பு: ஜி.பழனிவேல்

Palanivel

நவம்பர் 18, பெர்தாம் பள்ளத்தாக்கில் அண்மையில் வண்டல் மண் வெள்ளம் ஏற்பட்ட பகுதியிலிருந்து மாற்று பகுதிக்குச் செல்ல மறுக்கிறார்கள் என இயற்கை வள சுற்று சூழல் அமைச்சர் ஜி.பழனிவேல் குற்றம் சாட்டினார்.

இந்த மக்களுக்காக அரசாங்கத்தின் உதவியுடன் புதிய குடியேற்றப் பகுதியை உருவாக்க முடியும். ஆனால் இங்குள்ளவர்கள் தற்போது அவர்கள் குடியிருக்கும் இடத்திலிருந்து வெளியேற மறுப்புத் தெரிவிக்கின்றனர்.

எனவே இது போன்ற இன்னொரு பேரிடர் எற்பட்டால் அதனால் அவர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது சிரமமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் தற்காலிகக் குடியிருப்பு உரிமம் வைத்திருப்பதால் இவர்களை கட்டயப்படுத்தி வெளியாக்கவும் முடியாது. அவர்கள் ஆற்றங்கரையில் வாழ்கின்றனர். அவர்கள் அங்கேதான் வாழ்வோம் என்றால் வாழ்ட்டும் என்றார் டத்தோ. ஜி. பழனிவேல்.