டெல்லியி போலீஸ் கான்ஸ்டபிள் கொலை வழக்கில் 4 பேர் கைது

டெல்லியி போலீஸ் கான்ஸ்டபிள் கொலை வழக்கில் 4 பேர் கைது

4

டெல்லி புறநகரான விஜய் விகார் பகுதியில் நேற்று போலீஸ் கான்ஸ்டபிள் மோட்டார் சைக்கிளில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருவரும் ‘எல்’ பிளாக் பகுதியில் வந்தபோது அங்கிருந்த ஒரு ஆட்டோவில் சிலர் உட்கார்ந்து இருப்பதை கண்டனர். அவர்களின் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த இருவரும் அவர்களிடம் சென்று தீவிர விசாரணை  நடத்தினர். ஆனால் மர்மநபர்கள் அளித்த பதில் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு ஆட்டோவில் ஏறி  ஆட்டோவை விஜய் விகார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் துப்பாக்கியை எடுத்து ஜக்பீரையும், நரேந்திராவையும்  நோக்கி சரமாரியாக சுட்டனர். பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஜக்பீர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். நரேந்திரா முதுகில் குண்டு காயமடைந்தார். அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கொலை தொடர்பாக போலீசார் இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.