தலிபான் தீவிரவாதிகள் வெறியாட்டம் பொதுமக்கள் தலையை வெட்டி கொலை செய்துள்ளனர்.

தலிபான் தீவிரவாதிகள் வெறியாட்டம் பொதுமக்கள் தலையை வெட்டி கொலை செய்துள்ளனர்.

5

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பொதுமக்கள் 12 பேரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு காஸ்னி மாகாணத்தில் பாதுகாப்பு படையினருடனான சண்டையின் போது தீவிரவாதிகள் பொதுமக்கள் 12 பேரது தலையை வெட்டியுள்ளனர் என்றும் அவர்கள் 60 வீடுகளை அழித்துள்ளனர் என்றும் அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாகாண  துணை போலீஸ் தலைமை அதிகாரி அப்துல்லாக் என்சாபி கூறுகையில், அர்ஜிஸ்தான் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகள் பல்வேறு கிராமங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை இரவு அவர்கள் பிடித்து வைத்திருந்த 12 பேரை தலையை வெட்டிக் கொன்றுள்ளனர். அவர்கள் வீடுகளை தீ வைத்து எரித்துள்ளனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படை மற்றும்
தீவிரவாதிகள் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. என்று தெரிவித்துள்ளார்.