MH17 விமான விபத்தின் சிதைந்த பாகங்கள் ஊர்வலமாக நெதர்லாந்து கொண்டு வரப்பட்டது

MH17 விமான விபத்தின் சிதைந்த பாகங்கள் ஊர்வலமாக நெதர்லாந்து கொண்டு வரப்பட்டது

mh17

டிசம்பர் 10, கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த MH17 விமான விபத்தின் சிதைந்த பாகங்கள் அனைத்தும் இன்று நெதர்லாந்து ஆகாயப்படை தளத்திற்கு வந்தடைந்தன.
இவ்விமான சம்பவத்தின் சிதைந்த பாகங்கள் டிரக் வாகனத்தின் மூலம், கடந்த வாரம் உக்ரைனிலிருந்து புறப்பட்டு இன்று மதியம் 2.00 மணியளவில் நெதர்லாந்து வந்தடைந்தன. இச்சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுற்ற பின்னரே, இந்த சிதைந்த பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிதைந்த பாகங்கள் டிரக் வாகனத்தின் மூலம் இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் முன்னிலையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.