MH17 விமானம் விபத்துக்குள்ளான இடத்துக்கு செல்ல அனுமதி கிடைத்தது

MH17 விமானம் விபத்துக்குள்ளான இடத்துக்கு செல்ல அனுமதி கிடைத்தது

mh17

அக்டோபர், 13 கிழக்கு உக்ரேனில் MH17 விமானம் விபத்துக்குள்ளான இடத்துக்கு செல்ல ஆய்வுக்குழுவினருக்கு அனுமதி அளித்தனர் கிளர்ச்சி படையினர்.

விமானம் விமானம் விபத்துக்குள்ளான இடத்துக்குச் சென்று அங்கு சிதறிக் கிடக்கும் பயணிகளின் உடமைகளைச் சேகரிக்க மீட்புக்குழு அனுமதிக்கப்படும் என டச்சு நீதி அமைச்சின் பேச்சாளர் ஜீன் பிரான்ஸ்மேன் தெரிவித்ததாக CNN அறிவித்துள்ளது.

டச்சு அதிகாரிகளின் தலைமையில் அனைத்துலகக் குழு ஒன்று அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது.

கடந்த ஜூலை 17-ஆம் தேதி நெதர்லாந்திலிருந்து கோலாலம்பூர் விமான நிலையம் நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது.