MH17 விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சுட்டுவீழ்த்தப்பட்டது உறுதி

MH17 விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சுட்டுவீழ்த்தப்பட்டது உறுதி

MH

கடந்த ஜூலை 17-ஆம் தேதி நெதர்லாந்திலிருந்து கோலாலம்பூர் விமான நிலையம் நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த விமானத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பாகங்கள் தாக்கியதில், அவை விமானத்தை அதிவேகத்தில் துளைத்துள்ளது என நெதர்லாந்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

நெதர்லாந்தின் பாதுகாப்பு வாரியம் வெளியிட்ட விசாரணை அறிக்கை படி, MH17 விமானப் பேரிடரில் தொழில்நுட்பம் அல்லது மனிதத் தவறு எதுவுமே நிகழ்ந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் MH17 விமானம் கீழே விழுந்த போது அதிலிருந்த 298 பேரும் பலியானதாகவும் தொடக்கக்கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தையும், நெதர்லாந்து ஆகாயப் போக்குவரத்து நிபுணர்கள், விமானத்தின் கறுப்பு பெட்டி, ஆகாயப் போக்குவரத்துப் பாதை, மற்றும் துணைக்கோள் ஆதாரங்களின் அடிப்படையில் கண்டுபிடித்துள்ளனர்.