6-வது நாளாக தொடர்கிறது அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு

6-வது நாளாக தொடர்கிறது அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு

HUSS0375.storyimage

நவம்பர் 4, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின் இறுதி மேல்முறையீட்டு வழக்கு செவிமெடுப்பு இன்று 6-வது நாளாகத் தொடர்வதையடுத்து இன்று காலை 8 மணி முதலே புத்ராஜெயா நீதிமன்ற வாசலில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர்.
முன்னதாக நேற்று, நீதிமன்ற கட்டிடத்தின் முன் நின்றிருந்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அதிகமான ஆதரவாளர்களைக் காணமுடிந்தது.

அன்வாருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியவாறும், ஆதரவு கோஷங்களை எழுப்பியவாறும் அவர்கள் காணப்பட்டனர்.