15-ஆம் தேதி முதல் திரங்கானு அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

15-ஆம் தேதி முதல் திரங்கானு அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

malaysia1

ஜனவரி 7, அரசாங்க ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்தில் பாதியை ஊக்கத்தொகையாக வழங்க RM 7.4 மில்லியனை திரங்கானு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
எதிர்வரும் 15-ஆம் தேதி முதல் அம்மாநிலத்தில் உள்ள 6,635 அரசாங்க ஊழியர்களுக்கு குறைந்தது RM 500 ஊக்கத்தொகையாக வழங்கப்படவிருப்பதாக திரங்கானு மாநில மந்திரி முதல்வர் டத்தோ அகமது ரஸிவ் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

“இந்த ஊக்கத்தொகை சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு உதவியாக அமையும்” என டத்தோ ரஸிவ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.