வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது

Rain01

ஜனவரி 7, பகாங் மற்றும் கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. மாறாக, பேராக் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 27,108-ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், பகாங் மாநிலத்தில் தற்போது 18,171 பேர் 94 பாதுகாப்பு மையங்களில் தங்கி வருவதாக அப்பகுதியின் வெள்ள நிவாரண இயக்கம் அறிவித்துள்ளது. மேலும், பேராக்கில் ஏற்பட்ட வெள்ளம் மெல்ல சீரடைந்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,994-க்கு குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, கிளாந்தானில் 4,054 பேர் இன்னும் பாதுகாப்பு மையங்களில் தங்கியிருப்பதாகவும் கோலா கிராய் (1817), குவா மூசாங் (1662), தானா மேரா (387) மற்றும் மாச்சாங் பகுதியில் (188) பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில வெள்ள நிவாரண இயக்கம் தெரிவித்தது.