14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிலரங்கம்

14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிலரங்கம்

tot5

எதிர்வருகின்ற 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிலரங்கம் க்ராண்ட் பசிபிக் ஹோட்டலில் 2017 மார்ச் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பயிலரங்கத்திற்கு ம.இ.கா தேசிய இன்போ குழு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த பயிலரங்கத்தை 17/03/2017 அன்று ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் துவங்கி வைத்தார். இந்த பயிலரங்கதில் மருத்துவதுறை தலைவர் பேராசியர் டாக்டர் சுரேஷ் கோவிந்தன், BN பயிற்சி துறை தலைவர் டத்தோ டாக்டர் கைருல் அஜ்மீ, தகவல் தொடர்பு துறை முன்னாள் இயக்குநர் டத்தோ M.பெரியசாமி மற்றும் தகவம் திட்டமிடல் இயக்குநர் டத்தோ லோக்மன் ஆடாம் ஆகியோர் இந்த 3 நாட்களும் பங்கு பெற்றவர்களுக்கு பயன் தரும் பல தகவல்களை தங்கள் உரையில் கூறி பயிற்சி அளித்தனர். தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் அனுபவம் வாய்ந்த திரு. புனிதன், திரு. ரவி மற்றும் திரு. டானிஷ் பேசில் ஆகியோர் தங்கள் கருத்துகளை மேடையில் பதிவு செய்தனர்.

இந்த பயிலரங்கத்தை 19/03/2017 அன்று மல்டிமீடியா மற்றும் தகவல் தொடர்புதுறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சாலே சாயிட் பெருஹாக் நிறைவு செய்து வைத்தார்.

tot1 tot2 tot3 tot4 tot6 tot7 tot8 tot9 tot10tot11