வெடித்துச் சிதற இருக்கும் நாசாவின் செயற்கைகோள்

வெடித்துச் சிதற இருக்கும் நாசாவின் செயற்கைகோள்

9

நாசாவின் செயற்கை கோள் ஒன்று வானில் வெடித்துச் சிதறவிருக்கிறது. எரிபொருள் தீர்ந்து போனதால் வெடித்துச் சிதறவிருக்கும் இந்த செயற்கை கோளினால் பூமிக்கு எந்த ஆபத்தும் இருக்காது என நாசா தெரிவித்துள்ளது.
1997-ஆம் ஆண்டு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிலிருந்து மழைப்பொழிவின் அளவு பற்றி அறிவதற்காக விண்ணில் தி டிராஃபிக்கல் ரெயின் பால் மெஷரிங் மிஷன் செயற்கைகோள் ஏவப்பட்டது.
வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் பல சாதனைகளைப் புரிந்துள்ளது.
குறிப்பாக இதுவரை மழைக்கால சூறாவளிகள், வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி போன்றவற்றை மிகத்துல்லியமாக பல முறை கணித்து தந்திருக்கிறது. வெறும் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் 17 ஆண்டுகள் விண்வெளியிலேயே இருந்துள்ளது.
இந்நிலையில், அந்த செயற்கோளின் எரிபொருல் காலியாகும் நிலையில் உள்ளது. அதை சுற்றுவட்டப்பாதையிலேயே வைத்து நிரப்ப எந்த வழியும் இல்லை என நாசா கூறிவிட்டது. எனவே விரைவில் இந்த செயற்கைகோள் கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து விடும் என நாசா தெரிவித்துள்ளது.
அவ்வாறு விழும் செயற்கைகோள் முதலில் கீழ் வட்டப்பாதையை நோக்கி வரும், பின்னர் பூமியை நெருங்க நெருங்க வெடித்துச் சிதறி சிறு சிறு துண்டுகளாக விழுந்து விடும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. ஆனால், இந்த செயற்கைகோள் விழுவதால் பூமியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.