விமான பயணத்தில் 2 வயது குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அதிர்ச்சி

விமான பயணத்தில் 2 வயது குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அதிர்ச்சி

bas

நவம்பர் 8, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த 2 வயது குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பிட்ஸ்பர்கிலிருந்து போஸ்டனுக்கு சென்ற ஜெட் புளூ விமானத்தில் ஏற்பட்ட இச்சம்பவத்தால், அவசரமாக விமானம் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கப்பட்டது.

பின்னர் அக்குழந்தை விரைவாக மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. மசாசூசெட்ஸ் காவல் துறையினர் குழந்தையை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என்பதற்காக போக்குவரத்து நெரிசல்களை சீர் செய்து ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல உதவி செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தையின் உடல்நிலை குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை.