வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல்: PLUS நிறுவனம்

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல்: PLUS நிறுவனம்

traffic

பிப்ரவரி 18, சீனப் பெருநாளை நாளை கொண்டாட இருக்கும் நிலையில் பெரும்பாலோர் சொந்த ஊர்களுக்கு செல்வதை தொடர்த்து இன்று காலை முதல் நாட்டின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக PLUS நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கே தஞ்சோங் மாலிமிருந்து பேராக், கோப்பேங் வரையிலும், தெற்கே சிரம்பானிலிருந்து ஸ்கூடாய் வரையிலும் இன்று காலை முதல் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக PLUS நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன நெரிசல் இரவு வரை நீடிக்கும் என்றும் PLUS நிறுவனம் தெரிவித்துள்ளது.