வசதி குறைந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டியது ம.இ.கா

வசதி குறைந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டியது ம.இ.கா

logo

டிசம்பர் 30, மீண்டும் பள்ளிக்குப்போகலாம் என்ற வருடாந்திர நிகழ்வை தொடர்ந்த, நெகிரி மாநில புத்ரா பிரிவின் ஏற்பாட்டுடன், ம.இ.கா கம்போங் கெரெதாப்பி ஒத்துழைப்புடன் ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வசதி குறைந்த இந்திய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பள்ளிச்சீருடைகள் வழ்ங்கப்பட்டன.

இதனை ம.இ.கா புத்ரா பிரிவின் தேசிய செயலாளர் டினேஸ்வரன் ராஜகோபாலு எடுத்து வழங்கினார். கல்வியில் சாதனை படைப்பதற்கு வறுமை ஒரு தடைக்கல் அல்ல என்று கூறிய டினேஸ்வரன், கல்வி ஒன்றே நம் சமுதாயத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்றார்.

முடியும் என்று நம்பிக்கை வைத்து படியுங்கள் வெற்றி நிச்சயம் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில் இளம் நன்கொடையாளர் ஜீவகுமார், ம.இ.கா கிளை தலைவர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.