லெடாங்: பேருந்து ஒன்று லாரியுடன் மோதியதில் ஒருவர் பலி

லெடாங்: பேருந்து ஒன்று லாரியுடன் மோதியதில் ஒருவர் பலி

acci

டிசம்பர் 2, லெடாங், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 155-வது கிலோ மீட்டரில் புக்கிட் கம்பீர் டோல் சாவடி அருகே விரைவு பேருந்து ஒன்று லாரியுடன் மோதியதில் ஒருவர் பலியானதோடு சிலர் காயமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் ஐவர் காயமடைந்தனர். பலியானவர் இதுவரை அடையாளம் காணப்பட முடியாததால் அருகிலிருக்கும் தங்காக் மருத்துவமனைக்கு சவ பரிசோதனை மேற்கொள்ள கொண்டுச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ஒருவர் சுல்தானா பத்திமா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துக்கொண்டிருந்த இந்த விரைவு பேருந்து கோழிகளை எற்றி வரும் லாரியுடன் மோதியதாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் பேருந்து ஓட்டுனர் பெரிதாக காயமடையவில்லை என்றாலும் லாரி ஓட்டுனர் பலத்த காயத்திற்கு ஆளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.