ரோடுகளின் ஒரங்களில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்ற வேண்டும்

ரோடுகளின் ஒரங்களில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்ற வேண்டும்

OLYMPUS DIGITAL CAMERA

டிசம்பர் 8, விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு பாதுகாப்பற்ற விளம்பரப் பலகைகளை அகற்ற கூறி பொது மக்கள் புகார்:

ரோடுகளின் ஒரங்களில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் டிஜிட்டல் விளம்பர பலகைகளை அகற்றுமாறு பொது மக்கள் புகார் கூறியுள்ளனர்.
அவ்வாறு வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று பொது மக்கள் குறைக் கூறியுள்ளனர்.
மேலும் டிஜிட்டல் பலகைகள் போக்குவரத்து சமிக்ஞைகள் போலவே சிகப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களிலேயே இருப்பதால் பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முதியோர்களுக்குக் குழப்பம் ஏற்படுகின்றது.