ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி முன்னிலை

ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி முன்னிலை

raja

ஆகஸ்டு 18, இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெற்றத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி 41.5 சதவீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணி 39.8 சதவீத வாக்குகளுடன் பின்தங்கியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் 11 தொகுதிகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது.