யோகாசன போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு.

யோகாசன போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு.

7

 

கோவில்பட்டியில் உள்ள விளாத்திகுளத்தில் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம்சார்பில், தென்னிந்திய அளவில் யோகா போட்டியில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு மத்திய அரசு வழக்குரைஞர் முருகானந்தம் தலைமை வகித்தார். சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார், விளாத்திகுளம் டி.எஸ்.பி. அ. உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். பெங்களுருவில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான யோகாசனப் போட்டியில் முதலிடம் பிடித்த வேம்பார் இந்துநாடார் நர்சரி பள்ளி மாணவி பி.கே. இலக்கியாவுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.