யு.பி.எஸ்.ஆர் வினாத்தாட்கள்: குற்றச்சாட்டை மறுத்தனர் தமிழாசிரியர்கள்

யு.பி.எஸ்.ஆர் வினாத்தாட்கள்: குற்றச்சாட்டை மறுத்தனர் தமிழாசிரியர்கள்

SMB

நவம்பர் 7,அண்மையில் யு.பி.எஸ்.ஆர் வினாத்தாட்கள் முன்கூட்டியே அம்பலமானது தொடர்பில் நீலாய் தமிழ்ப் பள்ளியின் இரண்டு ஆசிரியர்கள் மீது நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அக்குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தனர்.

சுபாராவ் கமலநாதன் முருகன் – பழனிசாமி என்ற அவ்விரு ஆசிரியர்களும் குற்றச்சாட்டை மறுத்தனர்.

அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் கணிதம், அறிவியல் மற்றூம் தமிழ்மொழி தேர்வு தாள்களை வைத்திருந்ததாகவும் விநியோகித்ததாகவும் தம் மீது சுமத்தப்பட்ட 5 குற்றச் சாட்டுகளையும் சுபாராவ் கமலநாதன் மறுத்தார்.